நொடியில் காப்பாற்றப்பட்ட குடிமகன்!

பொதுவாக குடிபோதைக்கு அடிமையானவர்களுக்குத் தம்மைச் சுற்றி நடப்பவைகள் புரிவதில்லை.

உயிர் போகும் விடயம் என்றாலும் கூட அவர்கள் அதனை பொருட்படுத்துவதில்லை, ஏன் அவர்களுக்கு அது விளங்குவது கூட இல்லை.

அத்தகைய ஒரு சம்பவம் ஸ்பெயினின் ரியல்மெட்ரிட் நகர புஹெர்டா டெல் ஏஞ்சல் ரயில் நிலைய பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.

அக்காணொளியானது தற்போது இணையத்தளத்தில் அதிகம் பார்வையிடப்படும் காணொளியாக மாறியுள்ளது.

குடிபோதையில் தடுமாறி ரயில் தண்டவாளத்தில் அக்குடிமகன் வீழ்வதும், ரயில் வருவதற்குச் சில நொடிகளுக்கு முன்னர் அந் நபரை ஒரு பொலிஸ்காரர் இழுத்து காப்பாற்றுவதும், ரயிலை நிறுத்துமாறு மக்கள் சைகை செய்வதும் பார்ப்பவர்களை திகில் கொள்ள வைக்கின்றது. 

அந்தத் திகில்  காட்சியை நீங்களும் தான் பாருங்களேன் ......


+

நன்றி - வீரகேசரி

0 comments:

Post a Comment