நாவலாசிரியர் றொபட் லூயிஸ் ஸ்ரீவன்சனது 160வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்

பிரபல ஸ்கொட்லாந்து நாவலாசிரியர் றொபட் லூயிஸ் ஸ்ரீவன்னது 160வது பிறந்த நாளை கூகுள் நிறுவனம் பெருமையுடன் கொண்டாடுகிறது. இவரது ஓவியங்கள் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் பெரும் வரவேற்பைப்பெற்றிருக்கின்றன. 




கலிபோனியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சர்வதேச ரீதியாக 700ற்கு மேற்பட்ட இவ்வாறான ஓவியங்களை விசேட நிகழ்வுகள் மூலம் காட்சிப்படுத்துகின்றது.

இந்த புதிய ஓவியம் ஸ்ரீவன்னது புகழ்பெற்ற நாவலான 'ரெசர் லாண்ட்" ல் இருந்து பெறப்பட்டதாகும். முதலாவது எழுத்தான g என்பது ஓவியத்தில் உள்ள கடற்கொள்ளையன் தோற்றத்திலும் o என்பது திசைகாட்டியிலும், அடுத்த o ஆனது மலையின் உருவத்திலும், g கப்பலின் தோற்றத்திலும், l கப்பலின்கொடியிலும் eகொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெட்டியிலும் தோன்றுவதை நாம் அவதானிக்கலாம். 

றெபேட் லூயிஸ் ஸ்ரீவன்சன் 1850ல் பிறந்தவர். ஸ்ரீவன்சன் பல வருடங்களைப் பசுபிக் பெருங்கடலில் படகுப்பயணம் செய்தே கழித்தவர்.

0 comments:

Post a Comment